நிவர் புயல்: சென்னையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை,
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறியது. புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் பலத்த கனமழை பெய்து வருகிறது. புயல் முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 120 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசத்தொடங்கியுள்ளது.
இன்னும் 2 மணி நேரத்தில் புதுச்சேரிக்கு அருகே புயலின் மைய பகுதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்ப்பாக்கம், மெரினா கடற்கரை, சாந்தோம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.