சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2020-12-01 16:49 GMT
சென்னை,

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி 10 கூடுதல் நீதிபதிகளாக நக்கீரன் , சந்திரசேகரன், முரளிசங்கர், மஞ்சுளா ராமநாதன், தமிழ்செல்வி, கண்ணம்மாள்,சாந்திகுமார், ஆனந்தி சுப்பிரமணியம்,சிவஞானம் வீராசாமி , இளங்கோவன் கணேசன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்