அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-12-07 16:53 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக 60% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்