தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-01-12 08:17 GMT
தஞ்சாவூர், 

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வரகூர் கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து உரசியது.

இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயம் அடைந்தோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்