தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 323- ஆக உள்ளது. சென்னையில் இன்று 158- பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 758 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,272- ஆக உள்ளது.