பரபரப்பான சூழ்நிலையில் வரும் 22ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

Update: 2021-01-19 15:44 GMT
சென்னை:

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து அதே 27-ம் தேதி தான் விடுதலையாக உள்ளார். அவர் 28-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  

இதற்கிடையில், தமிழக முதல் அமைச்சர் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியையும் அமித்ஷாவையும்  சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22-ம் தேதி (ஜனவரி 22) நடைபெற உள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான  ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல் அமைச்சருமான  எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல், ஜெயலலிதா நினைவிட திறப்பு, சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்