குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு!
குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை
குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்
* குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து
* கொரோனா முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் ரத்து
* சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீடுகளுக்கே சென்று மரியாதை செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.