அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 01:16 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. அதேபோல, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வருகிற 20-ந்தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்