ஜெருசல புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1.000 பேர் செல்லலாம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஜெருசல புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1.000 பேர் செல்லலாம் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2021-02-15 08:50 GMT
கோவை,

கோவையில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம். அவரவர் மதம் அவரவருக்கு பெரிது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

தமிழகத்தில் இருந்து 600 பேர் வரை சென்று வந்த நிலையில் இனி 1,000 ஆக உயர்த்தப்படும். தமிழகத்தில் இருந்து ஜெருசல புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1.000 பேர் செல்லலாம்.

தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது. சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

மேலும் செய்திகள்