"கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2021-02-19 06:28 GMT
சென்னை,

தென்காசி மாவட்டம் கடையநல்லூரி பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போரோடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும்.  1,500 வழக்குகள் பதிவான நிலையில் சில வழக்குகளை தவிர அனைத்தும் ரத்து செய்யப்படும். 

இ-பாஸ் முறைகேடு கவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்