பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-23 10:28 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நிதித்துறை செயலர் மேலும் கூறுகையில், “  தமிழகத்தின் 2020-21 பொருளாதார வளர்ச்சி 2% என கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது . 

அடுத்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்கும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை”  என்றார். 

மேலும் செய்திகள்