தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு

மக்கள் நலனுக்காக செயல்படும் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் பிருந்தாகாரத் பேச்சு.

Update: 2021-03-01 01:20 GMT
நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு பெறாமல் இருப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, அவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காமல் வாய்ப்பூட்டு போட்டு கொண்டது. மத்திய பா.ஜனதா அரசு சொல்லாமல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாய் திறந்து பேச முடியாது.

எனவே, தமிழக மக்கள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்படும் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்