ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு

ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு போலீசார் நடவடிக்கை.

Update: 2021-04-08 00:10 GMT
சென்னை, 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்டார். அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அப்போது அவர், பா.ஜ.க. கொடியுடன் கூடிய காரில் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

இது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் குஷ்பு மீது தேர்தல் நன்னடத்தை விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே தேர்தல் விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி மசூதி அருகே பிரசாரம் செய்ததாக குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்