12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை

தமிழகத்தில் திட்டமிட்டபடி 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

Update: 2021-04-08 09:55 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இந்த சூழலில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கொரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்த நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

தேர்தல் முடிந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்