கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்

கொரோனா பரவல் அதிகரிப்பு: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு.

Update: 2021-04-08 23:09 GMT
சென்னை, 

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்