திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.
சென்னை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின
ஆனால், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.