சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையின் 3வது மாடியில் அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. கொரோனா நோயாளியின் தற்கொலை குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அச்சத்தால் தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.