சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2021-04-23 22:08 GMT
சென்னை,

சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 29). கடந்த 2018-ம் ஆண்டு இவர், வண்ணாரப்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜலாலுதீனை கைது செய்தனர்.

ஆயுள்தண்டனை

இந்த வழக்கு விசாரணை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரித்துவரும் சென்னை சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜலாலுதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த அபராத தொகையில் ரூ.10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, சிறுமியின் மறுவாழ்வுக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்