தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 107 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-29 14:39 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 46 பேரும் என 107 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 933 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 15,542 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,21,575 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,12,556 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு இன்று அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 5,445 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 064 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்து 385 ஆண்களும், 4 லட்சத்து 54 ஆயிரத்து 641 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்