அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-05-21 13:44 GMT
சென்னை,

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்