தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 13:46 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ  குழுவுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு ஆலோசனை வழங்கியது.

அதன்படி, தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்