தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு ஆலோசனை வழங்கியது.
அதன்படி, தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.