தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-26 17:34 GMT
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் வெப்பம் ஓரளவு தணிந்து காணப்படுகிறது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும் செய்திகள்