கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-06-27 18:37 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் டாக்டர் பவித்ரா தலைமையிலான மருத்துக்குழுவினர் கலந்து கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், உடல் ஊனமுற்றவர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் கடம்பன்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் செய்திகள்