தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி.

Update: 2021-07-04 01:18 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று 2,528 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 74 ஆயிரத்து 439 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4¾ லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்