தமிழகத்தில் மாவட்ட அளவில் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் மாவட்ட அளவில் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

Update: 2021-07-25 02:42 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்வாட் கால்பந்து கிளப் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கால்பந்து போட்டி உடலுக்கும், உள்ளத்துக்கும் வலு சேர்க்கக்கூடியவை. ஆனால் கேரளா, மேற்குவங்காளம், கோவா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கால்பந்து போட்டிகள் புகழ்பெறவில்லை. தமிழக இளைஞர்களிடமும் பெரியளவில் ஆர்வமில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

ஸ்வாட் கால்பந்து கிளப் நடத்துவது போல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கால்பந்து குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்படும். அதன்மூலம் தமிழகத்தில் கால்பந்து போட்டிகள் வளரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்