ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு எறிந்தும், படகுகளின் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசியும் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

Update: 2021-08-12 11:37 GMT
சென்னை

ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று  மீன் பிடிப்பதற்கா 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் சென்றனர். அவர்கள்  மீன் பிடிப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரியிடம் அதற்கான அனுமதி சீட்டை பெற்று சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும்  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு எறிந்தும், படகுகளின் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசியும் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

இதனால் ஒரு படகிற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்