சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு

சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு.

Update: 2021-08-20 20:24 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ந் தேதி கராத்தே வீரர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் பயிற்சி அமைப்பு மூலம் நடைபெற்றது. இதில் கராத்தே பயிற்சி பெற்ற வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்தனர். புதுக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்த கராத்தே வீரர் பாலாஜி (வயது 19) என்பவர் தனது கைகளில் சுற்றிய துணியில் தீ வைத்தபடி, ஓடுகளை உடைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது உடலில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாலாஜி பரிதாபமாக இறந்தார். பாலாஜி தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்