ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-08-26 08:19 GMT
சென்னை

சட்டசபையில்  உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

சட்டசபையில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 

ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்;"ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என கூறினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது

பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது என கூறினார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

மேலும் செய்திகள்