சிறையில் இருந்து வரும் நிலையில் நடிகை மீராமிதுன் மற்றொரு வழக்கில் கைது

சிறையில் இருந்து வரும் நிலையில் நடிகை மீராமிதுன் மற்றொரு வழக்கில் கைது காவலில் விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி.

Update: 2021-08-26 20:17 GMT
சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீராமிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மீரா மிதுன் சிறையில் இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஜோ மைக்கேல் என்பவரை மிரட்டியதாக எம்.கே.பி.நகர் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் தற்போது அவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக புழல் சிறையில் இருந்து அவரை அழைத்து வந்த போலீசார், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் தமிழரசி ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணைக்கு பின்பு, இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி லட்சுமி உத்தரவிட்டார். அதேவேளையில் மீரா மிதுனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு வந்த போது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மீரான மிதுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்பு, ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் மீண்டும் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்