பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கான பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2021-09-02 04:36 GMT
சென்னை

தமிழக அரசின்  பட்ஜெட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்