தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.

Update: 2021-09-08 22:04 GMT
சென்னை,

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்காத நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தபால் அட்டைகளில் பா.ஜ.க.வினர் அனுப்பிடுமாறு அக்கட்சி தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறியிருந்தார்.

அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று இதற்கான நிகழ்ச்சி நடந்தது. துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தகரணி துணைத்தலைவர் சி.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகள், தபால் மூலம் சென்னை தலைமை செயலக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தபால் அட்டையில், ‘தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்’, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக அண்டை மாநிலங்கள் போன்று தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடுவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்