இளம்பெண்ணிடம் சில்மிஷம்; போலீஸ் ஏட்டு கைது

இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-08 23:24 GMT
பூந்தமல்லி,

சென்னை போரூர் போக்குவரத்து பிரிவில் ஏட்டுவாக பணிபுரிந்து வருபவர் குமரன் (வயது 50). இவர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.

அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். போலீஸ் ஏட்டு குமரன், அவர்களில் ஒரு இளம்பெண்ணின் தோள் மீது கையை வைத்து சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூச்சலிட்டார்.

போலீஸ் ஏட்டு கைது

இதுபற்றி அங்கிருந்தவர்கள், போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், போரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீஸ் ஏட்டு குமரன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்குவரத்து போலீஸ் ஏட்டுவால் சில்மிஷத்துக்கு ஆளான இளம்பெண்ணுடன் அவருடைய தோழி ஒருவர் இருந்தார். அவர், உதவி கமிஷனர் ஒருவரின் மகள் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்