நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை ஐகோர்ட் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தேதிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலி பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சென்னை ஐகோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.