தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த புதூர் அருகே பெங்களூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர, 11 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.