திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை

திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.

Update: 2021-09-15 21:05 GMT
சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளம்பெண்களிடம் திருமண இணையதளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டதாக டெல்லியில் தங்கி இருந்த நைஜீரிய ஆசாமிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தமிழகம் முழுவதும் 32 இளம்பெண்கள் தங்களது மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.

ரூ.1½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பெண் உள்பட மேலும் 5 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்