தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்புகளை விட சற்று குறைந்து உள்ளது. இதுபற்றி சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 1,694 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று 1,724 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் 1,55,245 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் 190 பேருக்கு (நேற்று 194) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனையில் 10 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என 14 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 35,490 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவில் இருந்து 1,658 பேர் குணமடைந்து உள்ளனர். 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.