ஆவடி இரட்டை கொலை - ஒருவர் கைது

சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-04-29 04:28 GMT

ஆவடி,

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (வயது 72). சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். வயதான தம்பதி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சிவம் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. செல்போன் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்