அ.தி.மு.க. நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு
அ.தி.மு.க. நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றார். அப்போது அவரை வரவேற்பதில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க. மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரபாலாஜி உள்பட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குக்கு போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 22-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதுவரை ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றார். அப்போது அவரை வரவேற்பதில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க. மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரபாலாஜி உள்பட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குக்கு போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 22-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதுவரை ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.