கேரளாவில் மேலும் 7,823- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-12 16:05 GMT
திருவனந்தபுரம்,

கேரளத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 86,031 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 7,823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 

கேரளாவில்  மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,09,619 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 26,448 ஆகவும் உயர்ந்துள்ளன.மேலும் 12,490 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 46,85,932 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், 5 மாதங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 96,646 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்