தமிழகத்தில் கொரோனா குறைவு; 1,259 பேருக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 1,259 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-10-14 13:52 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இதேபோன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 1,289 ஆக இருந்தது.  இதனால் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது.  மொத்தம் 1,37,423 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் அரசு மருத்துவமனை 12, தனியார் மருத்துவமனை 8 என கொரோனாவுக்கு மொத்தம் 20 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் மொத்த பலி எண்ணிக்கை 35,853 ஆக உயர்வடைந்து உள்ளது.

15,451 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 32 ஆயிரத்து 92 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்