சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 163 ஆக குறைந்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து உள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் கொரோனா பாதிப்பு 163 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று 173 ஆக இருந்தது. இதனால், சென்னையில் இன்று தொற்று குறைந்து உள்ளது. எனினும், கோவையில் பாதிப்பு இன்று 143 ஆக உறுதியானது. இது நேற்று, 137 ஆக இருந்தது. செங்கல்பட்டில் 104 ஆக பதிவாகி உள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 95 ஆக இருந்தது.
இதேபோன்று, ஈரோடு 79, திருப்பூர் 74, தஞ்சை 63, திருவள்ளூர் 61, சேலம் 56, நாமக்கல் 54, திருச்சி 43 என கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.