சட்டமன்றத்தில் 'பனை' என்ற வார்த்தை தற்போது உச்சரிக்கப்பட காரணமே நாங்கள் தான் - சீமான்
சட்டமன்றத்தில் 'பனை' என்ற வார்த்தை தற்போது உச்சரிக்கப்பட காரணமே நாங்கள் தான் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உரிமை பெற்றவர் சசிகலா. அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிது இல்லை. அதற்கு எடப்பாடி பழனிசாமி விடமாட்டார்.
சசிகலா வருகையால் அதிமுகவில் தாக்கம் இருக்கும். எந்த மாதிரியான தாக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சட்டமன்றத்தில் இத்தனை ஆண்டுகளில் 'பனை' என்ற வார்த்தை தற்போது உச்சரிக்கப்பட காரணமே நாங்கள் தான் என்றார்.