சேலம்: மலை கிராமங்களில் ராட்சத வண்டுகளால் பொதுமக்கள் அவதி!

மலை கிராமங்களில் வினோத வண்டு பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-17 04:50 GMT
சேலம்,

கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள செம்பரக்கை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். 

இந்தநிலையில் அங்குள்ள வீடுகளை ராட்சத வண்டுகள் சூழ்ந்துள்ளன. வீட்டின் உள்ளே மேற்கூரையில் கூட்டமாக உள்ள இந்த வண்டுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார பணியாளர்கள் அந்த வண்டுகள் மீது மருந்தினை பீய்ச்சி அடித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்