கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி திறப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை நவம்பர் 1 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Update: 2021-10-29 15:05 GMT
சென்னை,

சென்னை கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 29.09.2015 அன்று தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. 

இதே போல், வேளச்சேரி-தரமணி, வேளச்சேரி-நெய்வேலி சாலைகளை இணைக்கும் வகையில் 108 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதி கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த மேம்பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்