கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மு.க ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.

Update: 2021-11-13 13:32 GMT
சென்னை,

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- “
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. 

சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” எனப்பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்