புதிதாக 18 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 109 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. 54 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

Update: 2021-11-15 13:36 GMT
புதுச்சேரி
புதுவையில்  இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 109 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்தனர்.
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிந்தோர் எண்ணிக்கை 1,866 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 1.62 சதவீதமாகவும், குணமடைவது 98.31 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 189 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 680 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 11 லட்சத்து 56 ஆயிரத்து 130 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்