ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

Update: 2021-11-24 13:02 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது இந்த கோவில் வைணவ தலங்களிலேயே மிகவும் முக்கியமானதாகும். இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அந்த வகையில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான்.,அவருடைய மனைவி சாதனா சிங் குடும்பத்தினருடன் இன்று காலை 10 மணியளவில் ஆண்டாள் கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் படம் மற்றும் ஆண்டாள் கிளி பிரசாதம் வழங்கப்பட்டது.  

அதன்பிறகு ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவுக்கு சிவராஜ் சிங் சவுகான் உணவு பொருட்களை வழங்கினார்.அதன் பிறகு ஆண்டாள் பிறந்த இடம் தங்கத்தேர் பெரியபெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் பிறகு தமிழக அரசின் முத்திரை சின்னமான ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் பார்வையிட்டார்  சிவராஜ்சிங் சவுகான் வருகையால் கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்