போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

Update: 2021-11-24 21:12 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்து தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அதை நிறைவேற்றாதது மனவருத்தத்தை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்