மாதையனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மாதையனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-11-26 19:07 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மாதையன் பொய்வழக்கில்தான் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டநிலையில், 34 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல. 74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்