தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 14:32 GMT
சென்னை,

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 718- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 751- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 11 பேர்  உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  27,27,635- ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 26,82,943- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால்  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,492- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  8,200- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்